இஸ்லாமை அவமதிப்பதா? நடுரோட்டில் மந்திரவாதியின் தலையை துண்டித்த ஐ.எஸ்

magician_beheaded_001சிரியாவில் மந்திரவாதி ஒருவரை மக்கள் மத்தியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தலைத் துண்டித்து படுகொலை செய்துள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகின்றது.

இந்நிலையில் தீவிரவாதிகளின் தலைமையகமாக விளங்கும் சிரியாவின் ரக்கா(Raqqa) நகரில் மந்திரவாதி ஒருவன் மக்களுக்கு வித்தைகளை காட்டி மகிழ்வித்து கொண்டிருந்தான்.

இதை பார்த்து கடுங்கோபம் கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், மந்திரவாதியை கைது செய்தனர்.

இதன்பின் இஸ்லாம் மதத்தை அவமதித்துவிட்டதாக கூறி சாலையின் நடுவே அவரை அழைத்து வந்து தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியில் இருந்த நபர் ஒருவர் கூறுகையில், அந்த மந்திரவாதி இஸ்லாமிய மதத்தை இழிவாக்கும் வகையில் வித்தைகள் ஏதும் செய்யவில்லை என்றும் சிறிய தந்திரங்களை செய்து காட்டி குழந்தைகளையும்- பெரியவர்களையும் மகிழ்வித்து தனது பிழைப்பை நடத்தி வந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

-http://world.lankasri.com