வடக்கில் உள்ள சிங்கள ராணுவ முகாம் மீது கற்கள் வீசப்பட்டது- இல்லை என்கிறார் ருவான் !

கடந்த தேர்தல் காலத்தில் வடக்கின் இராணுவ முகாம்களுக்கு கற்கள் வீசப்பட்டமை போன்ற எந்தவொரு வன்முறைச் சம்பவங்களும் இடம்பெறவில்லை என, இராணுவ ஊடகப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர், கடந்த வௌ்ளிக்கிழமையில் இருந்து இவ்வாறான வதந்திகள் சமூக வலைத்தளங்கள் போன்றவற்றின் மூலம் பரப்பப்பட்டு வந்தன.

இதற்கு இராணுவ ஊடகப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய நேற்று மறுப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைதியான சூழலே நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

-http://www.athirvu.com

TAGS: