தொடர்ந்து 3 நாட்கள் வீடியோ கேம்: இளைஞர் பரிதாப மரணம்

taiwan_man_001தாய்வானில் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடிய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

32 வயதான சியே என்ற இளைஞனரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் இன்டர்நெட் கபே ஒன்றிற்கு வீடியோ கேம் விளையாட வருவது வழக்கம். தினமும் வருவதால் அனைவருக்கும் பரீட்சயமானவாராக இருந்தார்.

இந்நிலையில் இன்டர்நெட் கபேக்கு நேற்று வந்த சியே தனது இருக்கையில் அசைவற்றுக்கிடந்தார்.

வழக்கமாக வீடியோ கேம் விளையாடிய அசதியில் சியே அப்படி தூங்குவார் என்பதால், அவரை பார்த்த ஊழியர்கள் அவர் தூங்கிக்கொண்டிருக்கிறார் என்றே நினைத்தனர்.

ஆனால் நீண்ட நேரமானதால் சந்தேகமடைந்த ஊழியர்கள் அவர் அருகே சென்று சோதித்தனர்.

குறித்த இளைஞர் அசைவுகள் அற்ற நிலையில் கிடப்பதை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சியேவின் இதயம் செயலிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து மூன்று நாட்களாக வீடியோ கேம் விளையாடியதே அவரது மரணத்திற்கு காரணமென்றும் தெரிவித்தனர்.

இதேபோல் புதிய தைபே நகரத்தில் உள்ள இன்டர்நெட் கபே ஒன்றில் 38 வயதான நபர் ஒருவர் ஐந்து நாட்கள் தொடர்ந்து வீடியோ கேம் விளையாடிய பிறகு கடந்த முதலாம் திகதி மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com