மக்களே பாருங்கள்.. நடுரோட்டில் பிணங்களை குவித்து மிரளவைத்த ஐ.எஸ்.ஐ.எஸ்

is_crucification_001சிரியாவில் 15 பேரை கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சாலையில் மக்கள் பார்வைக்கு வைத்துள்ள சம்பவம் அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் கிழக்கு சிரியாவில் உள்ள டெல் அல்– எஷாயுர், ரக்கா உள்ளிட்ட நகரங்களில் 15 பேரை சுட்டுக் கொன்றனர்.

இதனையடுத்து இந்த சடலங்களை சாலையில் மக்கள் பார்வைக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஈராக்கில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவரை மொசூல்(Mosul) நகரில் உள்ள உயர்ந்த கட்டிடத்திலிருந்து கீழே தள்ளி அந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

-http://world.lankasri.com