இனப்பிரச்சினை தீர்க்கப்படாமையே நாட்டின் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணம்: சம்பந்தன்

parliament_slஇலங்கையின் நீண்டகாலமாக நிலவும் இனப்பிரச்சினையை தீர்க்க புதிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், இன்று நாடாளுமன்றத்தில் இந்தக்கோரிக்கையை விடுத்தார்.

 

நாட்டின் பல்வேறு பிரச்சினைகளுக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வின்மையே காரணம் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டார்.

 

தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும். அது பிரிக்கப்படாத நாட்டுக்குள் நியாயமானதாகவும், நடைமுறைப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றும் சம்பந்தன் கூறினார்.

TAGS: