இலங்கையர்கள் உலகின் எந்தவொரு பகுதியிலும் அகதிகளாக இருக்கக்கூடாது! தாய்நாட்டுக்கு வருமாறு அழைக்கிறார் மங்கள

mangala-samaraweeraஇலங்கையர்கள் உலகின் எந்தவொரு பகுதியிலும் அகதிகளாக இருக்கக்கூடாது. எனவே, மீண்டும் தாய்நாட்டுக்கு திரும்பி வாருங்கள் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியாவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்திய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார்.

“சகல இன மக்களினதும் வாக்குகளுடன் உண்மையான அரசு இலங்கையில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் உலகின் எந்தவொரு பகுதியிலும் இலங்கையர்கள் அகதிகளாக இருக்கக்கூடாது.

தயவுசெய்து தாய் நாட்டுக்கு வாருங்கள். உங்கள் அனைவரையும் வரவேற்பதற்காக திறந்த மனதுடன் நாம் நேசக்கரம் நீட்டுகின்றோம்” – என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார்.

-http://www.tamilcnnlk.com

TAGS: