தமிழர்கள் ISIS தீவிரவாதிகளோடு இணைந்தனராம்: “ரா” வின் தமிழர் எதிர்ப்பு சிந்தனை !

ciaஅமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்திய குடியரசு தினக் கொண்டாட்டங்களை காண டெல்லி சென்றுள்ளார். இந்திய தலைநரில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன் நிலையில், ஈழத் தமிழர்கள் ISIS தீவிரவாதிகளுடன் இணைந்து அமெரிக்க அதிபரை போட்டு தள்ள திட்டம் தீட்டியுள்ளதாக இந்திய புலனாய்வு துறை அறிவித்துள்ளது. ISIS தீவிரவாதிகள் அமெரிக்க அதிபர் ஓபாமாவை இந்தியாவில் வைத்து கொலைசெய்ய முயல்வதாகவும். இதற்கு இலங்கை தமிழர்கள் மற்றும் மொரீஷஸ் நாட்டு பிரஜைகளை பயன்படுத்த இருக்கிறார்கள் என்றும் “ரா” அமைப்பு அறிவித்தல் வெளியிட்டுள்ளது.

இதனால் மும்பை, மற்றும் டெல்லி பகுதிகளில் வெளிநாட்டவர்களையும், இலங்கையர்களையும் குறிவைத்து கண்காணிப்பில் இந்தியப் பொலிசார்ஈடுபட்டுள்ளனர். ஈழத் தமிழர் விரோதப் போக்கை இந்திய புலனாய்வுப் பிரிவான “ரா” அமைப்பு நீண்ட நாட்களாக கொண்டுள்ளது என்பது வருந்தத்தக்க விடையம் ஆகும். தற்போது இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையால், இந்தியாவில் ஈழத் தமிழர்களுக்கு மேலும் பாதுகாப்பற்ற சூழல் ஒன்று உருவாகியுள்ளது.

-http://www.athirvu.com

TAGS: