இஸ்மாயில் விவகாரத்தை மீண்டும் அமைச்சரவையில் எழுப்புவோம்: மசீச சூளுரை

liongவிவசாயம்,  விவசாயம்  சார்ந்த  தொழில் அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி  விவகாரத்தில் மசீச  கடுமையாகக்  கண்டனம் தெரிவிக்கவில்லை  என்று  கூறப்படுவதை  அதன்  தலைவர்  லியோ  தியோங்  லாய்  மறுத்தார்.

முகநூலில்  சர்ச்சைக்குரிய  பதிவிட்டதற்குப்  பொறுப்பேற்க  சப்ரி  தொடர்ந்து  மறுப்பாரானால் அவ்விவகாரத்தை  அடுத்த  அமைச்சரவைக்  கூட்டத்தில்  மீண்டும் எழுப்பப்போவதாக  லியோ  உறுதி  கூறினார்.

இஸ்மாயில்  சப்ரியைக்  கண்டிப்பதில்  மசீச  கடுமை  காட்டியிருக்க  வேண்டும்  என  முன்னாள் கட்சித்  தலைவர்  சுவா  சொய்  லெக்  குறிப்பிட்டதற்கு  எதிர்வினையாக  லியோ  இவ்வாறு  கூறினார்.