மகாதிர்: இஸ்மாயில் கூறியதைத் துல்லியமாக ஆராய்வீர்

commentமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்.   மலாய்க்கார்கள்  சீனர்களின் கடைகளைப்  புறக்கணிக்க  வேண்டும்  என்று  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி  கூறியதை  பொதுமக்கள்  நுட்பமாக  ஆராய  வேண்டும்  எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“குற்றம்குறை  சொல்வதற்குமுன்  அவர்  சொன்னதைச்  சரியாக  மதிப்பிட  வேண்டும். செய்தித்தாள்களில்  படிப்பது  மட்டும்  போதாது”, என்றார்.

இஸ்மாயில் எந்தவொரு  இனத்தவரையும் குறிவைத்து  அவ்வாறு  கூறவில்லை  என   பிரதமர்துறை  விளக்கமளித்துள்ளது  பற்றி  கருத்துரைக்கையில் மகாதிர்  இவ்வாறு  கூறினார்.

இதற்குமுன்னர், அவர்  அதை அறிவிலித்தனமான  கருத்து  என்று  கூறியிருந்தார்.