இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மக்களுக்கு வெளிப்படுத்துங்கள்!- ஜே.வி.பி மாற்றுக்குழு

maithiri_indi_met_001இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென ஜே.வி.பி.யின் மாற்றுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் சில ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தங்கள் என்ன என்ன என்பது குறித்து வெளிப்படுத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி. கட்சியின் மாற்றுக் குழு அழைப்பாளர் அனுருத்த பொல்கம்பொல தெரிவித்துள்ளார்.

கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது நான்கு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தங்களின் உள்ளடக்கம் குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டியது அவசியமானது.

இந்த உடன்படிக்கைகளின் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாரதூரமான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

நாட்டின் எந்தவொரு நடவடிக்கைக்கும் பாராட்டு தெரிவிக்காத அமெரிக்கா இந்த உடன்படிக்கைகளை வரவேற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: