ஜ.நா அறிக்கை பிற்போடப்பட்டமை எமக்குக் கிடைத்த பாரிய வெற்றி – மைத்திரிபால சிறிசேனா

maithiri_articalஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை ஆறு மாங்களுக்குப் பின்போடப்பட்டமை எமக்குக் கிடைத்த பாரிய வெற்றி என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா கூறியுள்ளார்.

கட்டுநாயக்கவில் இடம்பெற்ற செயலமர்வில் பங்கெடுத்து உரையாற்றுப் போதே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை ஆறு மாங்களுக்குப் பின்போடப்பட்டமை எமக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும்.

புதிதாக அமைந்துள்ள அரசாங்கத்தின் மீது அனைத்துலக சமூகம் நம்பிக்கை வைத்துள்ளது. அதனாலேயே புதிய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அனைத்துலக சமூகம் செவிசாய்துள்ளது என அவர் அங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.

-http://www.pathivu.com

TAGS: