தற்கொலை செய்து கொண்டால்தான் யுத்த குற்றவாளிகள் தப்பலாம் – சம்பந்தன்

sampanthan_pressயுத்தக்குற்றவாளிகள் தற்கொலை செய்து கொண்டால் மாத்திரமே அவர்களுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைகளில் இருந்து அவர்களால் தப்ப முடியும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.

யுத்தக்குற்ற அறிக்கை தாமதிக்கப்பட்டுள்ளமையானது, யுத்தக்குற்றவாளிகளைத் தப்பிக்க இடமளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்த வெளியிட்டிருந்த சம்பந்தன், அதற்கு வாய்ப்பு இல்லை என்றும் அது குறித்த கவலைப்பட தேவையில்லை என்றும் கூறினார்.

-http://www.pathivu.com

TAGS: