மோடியுடன் அதிகாரப் பரவலாக்கம் குறித்து பேசப்படும்!- சுமந்திரன்

SumanthiranTNAஇந்திய பிரதமர் இலங்கை வரும்போது வடக்கு கிழக்;கு மாகாணங்களுக்கான அதிகார பரவலாக்கங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன், பிரதமர் மோடி இலங்கை வரும் போது அவருடன் குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

மோடி, முதல் தடவையாக உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு எதிர்வரும் 13ம் திகதி வருகிறார்.

இது, இந்திய பிரதமர் ஒருவர் 25 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் உத்தியோகபூர்வமாக அமைந்துள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: