உள்ளக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்: ஜெப்ரி பெல்ட்மன்

jeffri_colombo_002சர்வதேச நியதிகளுக்கு அமைய இடம்பெறும் உள்ளக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்கள் தொடர்பான உதவி பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில், இன்று பிற்பகல் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இதனிடையே, நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்த அவர், இன்று காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இரண்டு தரப்பினருக்கும் இடையிலான முக்கிய விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் இலங்கை காரியாலயம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெப்ரி பெல்ட்மன் முன்னதாக ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்தார். அத்துடன், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: