முலைக் காம்பைக் கிள்ளவில்லை: ஷாபிதான் சாட்சியத்துக்குச் சுவைகூட்ட அப்படிக் கூறுகிறார்

spiceஅன்வார்  இப்ராகிமின்  குதப்புணர்ச்சி  வழக்கில்  முகம்மட்  சைபுல்  புஹாரி  இரகசியமாக  கொடுத்த  சாட்சியங்களை  வெளியில்  கூறிவரும்  முகம்மட்  ஷாபி  அப்துல்லா,    சாட்சியங்களுக்குச்  சுவைகூட்ட  தம்  கைச்சரக்கையும்  சேர்த்துக்  கொண்டிருப்பதாக  தெரிகிறது.

பிப்ரவரி  17-இல்,  கிளானா  ஜெயாவில்,  ஒரு  கூட்டத்தில்  பேசிய  ஷாபி, “அன்வார் அவருடைய (சைபுல்)  முலைக்காம்புகளைக்  கிள்ளினார்”, எனக்  கூறினார்.

குதப்புணர்ச்சிக்குமுன்  இது  நடந்ததாம்.

மலேசியாகினி  நீதிமன்றக்  குறிப்புகளைச்  சோதனை  செய்து பார்த்ததில்  கிள்ளும்  சம்பவம்  பற்றி  எங்கும்  குறிப்பிடப்படவில்லை.

இதனிடையே, ஷாபி  குதப்புணர்ச்சி  வழக்கு  பற்றி  விளக்கக்  கூட்டங்கள்  நடத்துவதைப்  பல தரப்பினர்  குறைகூறியுள்ளனர். சட்டப் பேராசியர்  குர்தியால்  சிங்  நிஜார், இரகசியமாக  வழங்கிய  சாட்சியங்களை  ஷாபி  வெளியில்  தெரிவிப்பது  நீதிமன்றத்தை  அவமதிக்கும்  குற்றமாகும்  எனக்  கூறியுள்ளார்.

மூத்த  வழக்குரைஞர்  ஒருவரும்  முறையீட்டு  நீதிமன்றத்தின்  முன்னாள்  நீதிபதி  ஒருவரும்  அம்னோ- தொடர்புள்ள  ஷாபிமீது  ஒழுங்கு  நடவடிக்கை  எடுக்க   வேண்டும்  என  வழக்குரைஞர்  மன்றத்தில்  மகஜர்  சமர்ப்பித்துள்ளனர்.

இன்னும்  சிலரும்,  ஷாபி  குதப்புணர்ச்சி  தொடர்பில்  ஆதாரமற்றக்  குற்றச்சாட்டுகளையெல்லாம்  கூறி வருவதற்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என  இஸ்லாமிய  அமைப்புகளிடம்  புகார்  செய்துள்ளனர்.

ஷாபியிடம்  இது  பற்றி  வினவுவதற்கு  மலேசியாகினி  முயன்றது. அவரிடமிருந்து  இதுவரை  பதில்  இல்லை.