1எம்டிபி: நஜிப்பும் விசாரிக்கப்படலாம்

ambrin1மலேசியா  மேம்பாட்டு  நிறுவன(1எம்டிபி)த்தின்  கணக்குகள் அந்நிறுவனம்  தொடங்கப்பட்ட  2009-ஆம்  ஆண்டிலிருந்து  ஆய்வு  செய்யப்படும்  எனத்  தலைமைக்  கணக்காய்வாளர்  அம்ப்ரின்  புவாங்  அறிவித்துள்ளார்.

இன்று  இதை  அறிவித்த  அவர்,  இவ்விவகாரத்தில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கும்  விசாரிக்கப்படலாம்  என்றார்.

“தேவை  என்றால்  விசாரிப்போம். போலீசும்  இதைத்தான்  சொல்லியுள்ளது”, என்று  அம்ப்ரின்  கூறினார்.