குரானை எரித்தாயா! இளம்பெண்ணை கல்லால் அடித்து கொடூரமாய் கொன்ற கும்பல்

women_beaten_001ஆப்கானிஸ்தானில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல்(Kabul) உள்ள மசூதியின் அருகே பார்குந்தா(Farkhunda Age-27) என்ற இளம்பெண்ணை, அப்பகுதியை சேர்ந்த கும்பல் ஒன்று, கல் மற்றும் கம்பால் அடித்து தாக்கியுள்ளது.

இதனைதொடர்ந்து அவரை ஆற்றின் ஓரத்தில் தூக்கி எரிந்து, தீ வைத்து எரித்து கொலை செய்துள்ளது.

இந்நிலையில் அப்பெண் குரானை எரித்ததாகவும், அதற்காக அவர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே அப்பெண்ணின் பெற்றோர் தங்களது மகள் மனநலம் பாதிக்கப்பட்டவள் என தங்களது மகளை தாக்கிய கும்பலிடம் கூறியுள்ளனர்.

ஆனால் பெண்ணை கொலை செய்த கும்பல், அவர்கள் கூறியதை ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக காபூல் பொலிசாரிடம் இப்பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், 4 பேரை கைது செய்துள்ளனர்.

தற்போது இணையத்தில் பரவி வரும் இச்சம்பவத்தின் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-http://world.lankasri.com