எகிப்து ராணுவ தாக்குதலில் 40 பயங்கரவாதிகள் சாவு

egypt_008எகிப்து நாட்டின் வடக்கு சினாய் பகுதியில் அந்த நாட்டு ராணுவம் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட நடவடிக்கையில் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

வடக்கு சினாய் பகுதியில் தரைவழியாகவும், வான்வழியாகவும் பயங்கரவாதிகள் மீது ராணுவம் நிகழ்த்திய தாக்குதலில் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

egypt02பயங்கரவாதிகளின் 20 தலைமையகங்களும், 7 வாகனங்களும் அழிக்கப்பட்டன.

5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அன்ஸார் பெய்ட் அல்-மக்திஸ் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நிகழ்த்திய தாக்குதல்களில் 15 ராணுவ வீரர்களும், பொதுமக்கள் 2 பேரும் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://www.dinamani.com