பணத்தைக் காண்பிக்க முடியுமா? நஜிப் ஆதரவாளர்களை வினவுகிறார் மகாதிர்

showபிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்மீது  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர் முகம்மட்டின்  தாக்குதல்கள் நிற்பதாகத்  தெரியவில்லை. இப்போது  அவர்  நஜிப்  ஆதரவாளர்களை  நோக்கிக் கணைகளைப்  பாய்ச்சியுள்ளார்.

மகாதிர்  தம்  வலைப்பதிவில், நஜிப்  ஆதரவாளர்களை  நோக்கி  அம்னோ  தலைவரின்  உருவாக்கமான  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம் (1எம்டிபி)  ரிம42 பில்லியன் கடன்  பட்டிருப்பதை  ஒப்புக்கொள்கிறார்களா  என்று  வினவியுள்ளார்.

நஜிப்  தம்  முன்வைக்கப்படும்  கேள்விகளுக்குப்  பதில்  அளிக்கக்  காணோம். ஆனால்,  நஜிப்புக்கு  அம்னோ  தொகுதிகளும்  பிஎன்னும்  மஇகாவும்  செனட்டர்களும்  பல்வேறு  தரப்புகளும்  ஆதரவு  தெரிவிப்பதைத்தான்  பார்க்கிறோம்.

“என்னை  ஆதரிக்கச்  சொல்லி நான்  யாரையும்  கேட்கவில்லை. ஆனால்,  நஜிப்பை  ஆதரிப்பவர்களிடம் அவர்கள்  அவரது 1எம்டிபியை,  அதாவது  1எம்டிபி  ரிம42 பில்லியன்  கடன்  வாங்கி  இருப்பதையும் வான்கிய  பணம்  எங்கே  என்றால்  அவரால்  பதில்  சொல்ல  முடியாமல்  இருப்பதையும்  ஆதரிக்கிறார்களா  என்று  கேட்க விரும்புகிறேன்”, என்றவர்  கூறினார்.