காணாமல் போனோர் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி இணக்கம்!

northern_provincial_councilகாணாமல் போனோர் தொடர்பில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால இணக்கம் வெளியிட்டுள்ளார்.

இந்த ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இந்தநிலையில் அதில் உள்ள சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி இணங்கியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

இதேவேளை முறைப்பாடுகளை விசாரிக்கவென்று அதிகாரிகளை நியமிக்கவுள்ளதாகவும் மெக்ஸ்வெல் குறிப்பிட்டுள்ளார்.

பரிந்துரைகளின் அடிப்படையில் வடக்கு மற்றும் கிழக்கில் தேவைப்படுவோருக்கு உளவள ஆலோசனைகளை வழங்கவுள்ளதாகவும் தலைவர் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: