தமிழக அரசுடன் இணைந்து செயற்பட தயார்! சென்னையில் இலங்கை அமைச்சர் பேச்சு

laxman-senewiratna_CI-285x150இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழக அரசுடன் இணைந்து செயல்படவிரும்புவதாக இலங்கை அரசு கூறியுள்ளது. தனிப்பட்ட பயணமாக இலங்கை அமைச்சர் லக்ஷ்மன் செனவிரட்ன நேற்று சென்னை சென்றார்.

அப்போது மீனவர் பிரச்சினை குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கச்சதீவை இந்தியாவிடம் இலங்கை ஒரு போதும் திருப்பி அளிக்காது என அப்போது அவர் கூறினார்.

தமிழர்கள் அளித்த வாக்குதான் சிறீசேனா அதிபர் ஆனதற்கு முக்கியக் காரணம் என்று கூறிய இலங்கை அமைச்சர், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசுடன் இணைந்து செயல்பட தங்கள் நாடு தயாராக இருப்பதாக கூறினார்.

-http://www.tamilcnnlk.com

TAGS: