பெர்மாத்தாங் பாவ்: வாக்களிப்பு முடிவுற்றது

 

ppaulow1இன்று தொடங்கிய பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்களிப்பு முடிவுற்றது. வாக்குகள் எண்ணப்படுவது தொடங்கியுள்ளது.

நால்வர் போட்டியிட்ட இந்த இடைத்தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைவானதாக இருந்தது.

பிகேஆரின் டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில், அம்னோவின் சுஹைமி ஷபுடின், பிஆர்எம்மின் அஸ்மான் ஷா ஓத்மான மற்றும் சுயேட்சையாக சாலே இஸாக் ஆகியோர் போட்டியிட்டனர்.

பிகேஆரின் வேட்பாளர் வான் அஸிசா குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.