தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி இலங்கை அரசாங்கம் செய்த தமிழின அழிப்பின் சாட்சியங்கள் பல வெளிவந்திருந்தாலும் இப்பொழுது அதன் நேரடித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சில நேரடிச் சாட்சியங்கள் வெளிவந்துள்ளன.
இந் நேரடிச் சாட்சியங்களின் வாக்குமூலங்களினால் இலங்கை அரசாங்கம் பல்வேறு நெருக்குதல்களுக்கு உள்ளாகவுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளார்கள்.
இலங்கையின் வடக்கில் 2009ம் ஆண்டு நந்திக்கடலில் வைத்து விடுதலைப்புலிகள் அமைப்பு அதன் ஆயுதப்போராட்டத்தை மௌனிப்புச் செய்தது.
அதன் பின் இறுதிக்கட்டப் போராட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர்கள், தளபதிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பல்வேறு தகவல்களை முன்னுக்குப்பின் முரணாகத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் விடுதலைப்புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் பா. நடேசனின் மகனும், சமாதானச் செயலாளரான புலித்தேவனின் மனைவியும், நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் மலரவனின் மனைவியும் இவ் வெள்ளைக்கொடி விவகாரத்தில் ஐ.நாவின் நேரடிச் சாட்சியங்களாக மாறியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான காரியாலத்தியில் அமைந்துள்ள விசேட அறையொன்றில் இன்று சுவிஸ் நாட்டின் நேரப்படி 5.30 மணியளவில் இவ்விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
இக்கலந்துரையாடல் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கையின் இறுதிக்கட்டப்போரின் போது நிகழ்ந்த வெள்ளைக்கொடி விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் பல்வேறு விதத்தில் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை தெரிவித்துவருகின்றது.
எனினும், தற்பொழுது நேரடிச்சாட்சியங்கள் பலர் ஐக்கிய நாடுகள் சபையோடு நேரடியான தொடர்பினை ஏற்படுத்தியுள்ளதனால் வரவிருக்கும் செப்டெம்பர் மாத அறிக்கை இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் கண்டமாக மாறும் என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
ஏற்கனவே இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான ஆதார ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகள் என்பன வெளிவந்து மிகப்பெரிய அழுத்தங்களை இலங்கை இராணுவத்தினரும் அரசாங்கமும் சந்தித்திருந்தன.
துப்பாக்கிச்சூட்டுச்சம்பவங்கள் மக்கள் மீது நடத்தப்பட்டமைக்கு பல்வேறு ஆதாரங்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்பொழுது அதன் தாக்கம் இன்னும் வீரியம் பெறும் நிலை உருவாகியுள்ளது. நேரடியாகவே பாதிக்கப்பட்டவர்கள் சாட்சிகளாக மாறும் பொழுது அழுத்தங்கள் பலமடங்காக அதிகரிக்கும்.
இந்நிலையில் செப்டெம்பர் மாதம் வரவிருக்கும் போர்க்குற்ற அறிக்கையும் அதன் தாக்கமும் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுக்கும் வல்லமைகளை கொண்டிருக்கும் என்கின்றார்கள் அரசியல் அவதானிகள்.
இதேவேளை இலங்கையின் இனவழிப்பு நடவடிக்கையை சுயாதீனமான விசாரணையை சர்வதேச சமூகம் பொறுப்புடன் செயற்படுத்தி இனவழிப்பில் பாதிக்கப்பட்ட/பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு பெறுமதியான தீர்வினையும், போர்க்குற்ற விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச மனிவுரிமை ஆர்வலர்கள் கோரிக்கைகளை முன்வைக்கின்றார்கள்.
இக் கலந்துரையாடலினை பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனமாகிய பசுமைத் தாயக அமைப்பும், அமெரிக்காவின் தமிழர் பாதுகாப்புச் சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com
இந்தியா தனது குள்ள நரித்தனத்தால் இவை அனைத்தும் பொய் என்று சொல்லி சிங்களவனுக்கு ( தொப்புள் கொடி உறவுக்கு) அதரவாக நடவடிகையை முன்னெடுக்கும்.தமிழ் நாடு மக்கள் வாயில் விரலை வைத்து சப்பிகொண்டு மில்லி போட்டு ஈழ படுகொலையை மறந்து வாழ்வதுதான் தலை எழுத்து.
எவ்வளவு விட்டு கண்ணீர் என்ன பயன்.இந்தியா செய்த துரோகத்தால் சிங்களவனை ஒன்றுமே செய்ய முடியாமல் போய் விட்டது.அப்பாவி ஈழ மக்களை கொன்றது இந்த இந்திய துரோகிதானே.(அம்பை எய்தவன் இந்த மூதேவிதானே)
கொலைகாரனை நடமாட விட்டது இந்த துரோக இந்தியாதானே. ஐக்கிய பொது சபையில் வாய்மூடி இருந்து தமிழனக்கு துரோகம் செய்த இந்தியாவோடு தமிழ் நாடு சேர்ந்து வாழ்வதுதான் வேதனை. இதுவே வாடா நாட்டுக்காரனுக்கு அல்லது தமிழ் நாட்டின் அண்டை மாநில காரனுக்கு ஏற்பட்டு இருந்தால் சும்மா இருப்பார்களா?பொங்கி இருப்பார்கள்.தமிழ் நாட்டுகாரனுக்கு கொ……….(அசிங்கமாக ) இல்லை என்றுதான் சொல்லதோனுகிறது.
2 முறை ஐ நா வில் மத்திய அரசு இலங்கை அரசுமேல் கொண்டு வந்தத் போர்க் குற்றத் தீர்மானத்தையே வலுவிழக்கச் செய்தப் பெருமை காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசையே சேரும்; உண்மையில் இலங்கைமேல் கொண்டு வரப் பட வேண்டியது மனிதகுலத்திற்கு எதிரான இனப் படுகொலை குற்றச் சாட்டு; ஆனால் கொண்டுவரப் பட்டதோ வெறும் போர்க் குற்றத் தீர்மானம். அந்தத் தீர்மானத்தையே இந்தியா ஏன் வலுவிழக்கச் செய்ய வேண்டும். இது தமிழர்களுக்கு செய்த செய்த துரோம் தானே? மேலும் போர் நடந்த அன்று, இந்தியாவிலிருந்து கொழும்புவுக்கு சென்றவர்கள் அன்றைய பாதுகாப்பு மன்றத் தலைவர், வெளியுறவுச் செயலர் மேலும் அன்றைய வெளியுறவு அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி அவர்கள். இவர் கொழும்புவில் இருந்தப் போது, அன்றைய போருக்கு தலைமைத் தாங்கி நடத்தியவரான பொன்சேகா அவர்கள் இவருக்கு தனது ராணுவ நடவடிக்கை அறையில் போர்ப் பற்றிய நிலவரங்களை ஏன் இந்திய வெளியுறவு அமைச்சருக்கு விளக்கமளிக்க வேண்டும். போரை தடுத்து நிறுத்துங்களென்று தமிழர்கள் மத்திய அரசிடம் கேஞ்சியப் போதெல்லாம் இது இலங்கையின் உள்நாட்டு விவகாரமென்று கைவிரித்தவர்கள் ஏன் போர் நிலவரங்களைப் பற்றி பொன்சேகாவிடம் தனது ராணுவ நடவடிக்கை அறையில் விளக்கம் பெற வேண்டும். அந்த நேரத்தில் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடந்துக் கொண்டிருந்த நேரம். நல்லத் தேர்தல் முடிவுகளைவிட இலங்கையில் நடந்த மனிதகுலத்திற்கு எதிரானப் போரில் ஏன் இவர்கள் கலந்துக் கொள்ள வேண்டும். இந்தச் செய்திகளையெல்லாம் நாம் மக்கட் தொலைக் காட்சியில் கண்டு தெரிந்துக் கொண்ட உண்மைகள். ஆனால் இன்று, அந்தக் காங்கிரஸ் கட்சியோடு அடுத்தத் தேர்தலில் கூட்டுச் சேர ஏன் கலைஞர் துடிக்க வேண்டும்! இனிமேல் திமுக இக் கட்சியோடு கூட்டுச் சேரக் கூடாது. இனிமேலாவது இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கும் தமிழக மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். இதுவே எனது அன்பானக் கோரிக்கை.
நடேசனின் மனைவி சிங்களப்பெண்
வெள்ளைக்கொடியுடன் கணவர்
நடேசனுடன் உடன்சென்றவர் ராணுவத்துடன் வாக்கு வாதம்
செயிதவர்.அவர் சாச்சியம் அளித்திருந்தால் வலுவாக இருந்திருக்கும்.
இந்தியாவைப்போல் மடத்ரோகிகள் வேறு யாரும் கிடையாது.
ஆனாலும் கூப்பிடு தூரத்தில் இருந்த தமிழர்கள் அதைவிட துரோகிகள். தமிழ் நாட்டு மீனவர்களியே காப்பாற்ற முடியாத தமிழ் நாட்டு தமிழர்களை என்ன சொல்வது? ஜாதி மயிரு மட்டை பேசியே நம் இனத்தை ஒன்றுமில்லா இனமாகிய ஈன ஜென்மங்கள்
தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் பண்ணுகின்ற தவறுகளுக்குத் தமிழர்களை ஏன் குறை சொல்லுகிறீகள்? அரசியல்வாதிகளுக்கு வயிறு பெரிசு. பிள்ளைக் குட்டிகள் பெரிசு.அவன் என்ன பண்ணுவான்? அவன் குடும்பத்தைக் கவனிக்கவே அவனுக்கு நேரமில்லை. இதையெல்லாம் கவனிக்க ‘இனப்பற்று’ என்று ஒன்று இருக்க வேண்டும்!