நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான், 1எம்டிபி- இலிருந்து கிட்டத்தட்ட யுஎஸ்$700 மில்லியன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வங்கிக் கணக்குக்கு மாற்றிவிடப்பட்டிருப்பதாக செய்தி வெளியிட்ட வால் ஸ்திரிட் ஜர்னல் ஆசியா(WSJA)-வைக் கடிந்து கொண்டார்.
அனைத்துலக அளவில் பேர்பெற்ற செய்தித்தாளான அது தனக்கு அத்தகவல் எங்கிருந்து கிடைத்தது என்பதைத் தெரிவிக்காததற்காக அமைச்சர் அதைச் சாடினார்.
“WSJA தீய நோக்குடன் சுமத்தியுள்ள அக்குற்றச்சாட்டைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அது உண்மை என்றால் செய்திக்கான மூலத்தையும் அது தெரியப்படுத்தியிருக்க வேண்டும்
“பெயர் குறிப்பிட விரும்பாத விசாரணையாளரை மேற்கோள் காட்டி அந்த அவதூறு அறிக்கையை வெளியிட்டதன்வழி சரவாக் ரிப்போர்ட்-டின் சாக்கடை இதழியல் அளவுக்கு AWSJ தரம் தாழ்ந்து போயுள்ளது”, என ரஹ்மான் டிவிட்டரில் கூறினார்.
தைரியம் இருந்தால் அந்த பத்திரிக்கையின் மீது அவதூறு வழக்கு போடுங்களேன். தைரியம் இல்லையா?. பேசாமல் ஒப்புக் கொள்ளுங்கள். இது என்ன ‘The Edge’ பத்திரிக்கையா காரணம் கேட்டு கடிதம் அனுப்ப. எங்கே அந்த சஹிட்?.
அவதூறு அறிக்கை எனில் அவதூறு வழக்கு தொடர வேண்டியதுதானே?? தயக்கம் ஏனோ??? அல்லது தைரியம்தான் இல்லையா?? எதிர் அறிக்கை விட வேண்டுமென்பதற்காக வெறுமனே வெத்து அறிக்கையை விட வேண்டாம். அமைச்சர் தரம் இருப்பின், தரமான அறிக்கையை வெளியிடுங்கள்!! இல்லையெனில் அடக்கி வாசிப்பதே நலம் !! அமைச்சராம் அமைச்சர்!! அமையச்சர் என்று சொல்லவே நா கூசுகிறது!!!
அவாதூறு வழக்கா நெருப்பில்லாமல் புகையாது அமைச்சரே ?
அண்ணாச்சி, உங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை! உங்கள் மீசை ஏன் துடிக்கிறது? சம்பந்தப்பட்டவருக்குத் தாடி கூட அசையவில்லை! நீங்கள் என்ன ரோஸ்மாவின் காலணிக்குக் காவலரா?