கசிந்த 1எம்டிபி ஆவணங்கள் உண்மையானவையா? போலீஸ் ஆராய்கிறது

verifyவெளியில்  கசிய  விடப்பட்டுள்ள  1எம்டிபி  ஆவணங்கள்  உண்மையானவையா, ஜோடிக்கப்பட்டவையா  என்பதை  போலீஸ்  ஆராய்ந்து  உறுதிப்படுத்தும்.

ஜனநாயக  நடைமுறைகளைக்  கீழறுப்புச்  செய்து  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  கவிழ்ப்பதற்கு  ஒரு  சதித்  திட்டம்  இருக்கும்  சாத்தியத்தை மறுக்க போலீஸ்  தயாராக  இல்லை  எனப்  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  கூறினார்.

பேங்க்  நெகாரா அதிகாரிகள்  உள்பட  சிறப்புப்  பணிப்  படை  உறுப்பினர்கள்  அனைவரும்  விசாரிக்கப்படுவார்கள்  என  காலிட்  தெரிவித்தார்.

“போலீஸ்  விசாரணையின்  நோக்கம்  ஆவணங்களைக்  கசிய  விட்டவர்களை  அடையாளம்  காண்பதும்  ஆவணங்கள்  உண்மையானவையா  இட்டுக்கட்டப்பட்டவையா  என்பதை  உறுதிப்படுத்துவதும்தான்”,  என்றாரவர்.