லவ் யாட் பிளாசாவில் கைபேசி திருடிய ஆசாமி விசாரணை கோரினான்

trialகோலாலும்பூர், மெஜிஸ்திரேட்  நீதிமன்றத்தில்  இன்று, லவ் யாட்  பிளாசாவில்  கைபேசி ஒன்றைத்  திருடியதாகக்  குற்றம்  சாட்டப்பட்ட  ஆடவன்   குற்றச்சாட்டை  மறுத்து விசாரணை  கோரினான்.

ஷாருல்  அன்வார்  அப்துல்  அஜீஸ், 22, ஜூலை  11இல்  மாலை மணி  4.47  அளவில்  அக்குற்றத்தைப்  புரிந்ததாகக்  குற்றம்  சுமத்தப்பட்டது.

திருட்டுக்  குற்றங்களுக்கான  குற்றவியல்  சட்டம் பகுதி  380-இன்கீழ்  அவன்மீது  குற்றம்  சுமத்தப்பட்டது. அச்சட்டம்  குற்றவாளிகளுக்கு ஏழாண்டுச்  சிறை  அல்லது  அபராதம்  அல்லது  இரண்டும்  விதிக்க  வகை  செய்கிறது.

மெஜிஸ்திரேட்  நூர்  அமினாதுல்  மர்டியா  முகம்மட்  நோர், ரிம3,000 பிணையிலும்  ஒருவர்  பொறுப்பிலும் ஷாருலை  விடுவித்தார். ஆகஸ்ட்  14இல்  அவ்வழக்கு  விசாரணைக்கு  வரும்.