அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சிமீது போலீஸ் விசாரணை

khalid polஅரசாங்கத்தை  ஜனநாயகத்துக்குப்  புறமான  வழியில்  கவிழ்க்கும்  முயற்சி  மேற்கொள்ளப்பட்டதா  என்பதை  போலீஸ்  ஆராயும்.

இதனைத்  தெரிவித்த  இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்,  பெட்ரோசவூதி   முன்னாள்  தலைவர்  சேவியர்  ஜஸ்டோ  பற்றி  தாய்லாந்து  போலீசார்  வெளியிட்டுள்ள  தகவல்களையும்  சரவாக்  ரிப்போர்டுக்கு  எதிரான  முன்னாள்  செய்தியாளர்  லெஸ்டர்  மெலான்யி-இன்  அறிக்கையையும் அடிப்படையாக  வைத்து  போலீஸ்  அந்தக்  கோணத்தில்  விசாரணை  நடத்தும்   என்றார்.

குற்றவியல்  சட்டம்  பகுதி  124-இன்கீழ்  போலீஸ் விசாரணையை  நடத்தும்  என  காலிட்  ஷா   ஆலமில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.