நஜிப்பின் 1எம்டிபி பற்றிய பதில்கள் புத்தகமாக வருகிறது

Jasabook1எம்டிபி விவகாரம் குறித்த கேள்விகளுக்கு பிரதமர் நஜிப்பின் பதில்களை சிறப்பு விவகார இலாக (ஜாசா) புத்தகமாக வெளியிடவிருக்கிறது.

அப்புத்தகம் நாடு தழுவிய அளவில் வெளியிடப்படும் என்று ஜாசாவின் தலைமை இயக்குனர் முகமட் புவாட் ஸார்காசி கூறினார்.

“மகாதிர், சரவாக் ரிபோர்ட், மலேசியாகினி மற்றும் மலேசியன் இன்சைடர் ஆகிவை எழுப்பியவையின் அடிப்படையில் நாங்கள் கேள்விகளைத் தொகுத்துள்ளோம்.

” 1எம்டிபி அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பிரதமரின் பதில்கள் அடிப்படையில் கேள்விகள் தயாரிக்கப்பட்டுள்ளன”, என்று அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறினார். அதன் வரைவு செம்மைப்படுத்துவதற்காக 1எம்டிபியின் தலைவரும் குழுமத்தின் செயல்முறை இயக்குனருமான அருள் கந்தா கந்தசாமியிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று புவாட் கூறினார்.

“சிலர் 1எம்டிபி பிரச்சனைகளுக்கு பதில் அளிக்கப்படாமல் இருக்கிறது என்று கூறுவதால் நாங்கள் அதனை இவ்வாரத்தில் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளோம்”, என்று அவர் மேலும் கூறினார்.