உடலுறவுக்கு மறுத்த 19 பெண்களை படுகொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்: ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

sex_slaveis_001ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களுடன் உடலுறவு வைத்துகொள்ள மறுத்த 19 பெண்களை படுகொலை செய்துள்ளனர் என்று ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது.

உலகளவில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வரும் ஐஎஸ் அமைப்பினர் பெண்களுக்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

இது தொடர்பாக ஐ.நா.சபையின் குழு விசாரணை நடத்தியது. அதில் ஐஎஸ் அமைப்பினரால் பெண்கள் பாலியல் அடிமைகளாக விற்கப்படுகின்றனர் எனவும் அவர்கள் பீப்பாய்களில் அடைக்கப்பட்ட எரிவாயு போன்று விற்கப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு பெண்ணை 5 அல்லது 6 ஆண்கள் அடிமையாக விலைகொடுத்து வாங்கிகொள்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் ஒன்று முதல் 9 வயது உள்ள பெண் குழந்தைகள் தான் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் பெண்களுக்கு வைத்துள்ள விலைப்பட்டியலும் வெளியாகியுள்ளது.

மேலும் தங்களின் வீரர்களுடன் உடலுறவு வைத்துகொள்ள மறுக்கும் பெண்களை அவர்கள் படுகொலை செய்வதாகவும், அந்தவகையில் சில தினங்களுக்கு முன்னர் 19 பெண்கள் கொல்லப்பட்டதாகவும் ஐ.நா விசாரணையில் தெரியவந்துள்ளது.

https://youtu.be/9r9QpVd2chM

-http://world.lankasri.com