பெர்சே 4: மகாதிர் மீண்டும் பெர்சே பேரணிக்கு வருகையளித்தார்

 

bersih4-16அரசாங்கத்தால் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டிருக்கும் பெர்சே 4 பேரணிக்கு நேற்று முன்னாள் பிரதமர் திடீர் வருகை மேற்கொண்டார். அவ்வருகையின் போது அங்கு 6 நிமிடங்கள் இருந்தார். ஆனால், ஆர்ப்பாட்டக்காரர்களிடம் “தொடருங்கள், தொடருங்கள்” என்று ஊக்கமூட்டிய பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.

மகாதிரின் அவ்வருகையை வெறும் 6 நிமிடம்தானே என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி சிறுமைப்படுத்திக் கூறினார்.

இன்று, மகாதிர் அவருடைய துணைவியார் சித்தி ஹஸ்மா மற்றும் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் ஆகியோருடன் கோலாலம்பூர் கொம்யூட்டர் நிலையத்திற்கு மாலை மணி 4.30 க்கு வந்து சேர்ந்தார்.

அங்கு பசார் செனியில் மகாதிர் பேசினார். இந்த இரண்டாவது வருகையின் போது அவர் அங்கு ஒரு மணி நேரத்தைக் கழித்தார், அதில் அவர் நடத்திய 20 நிமிட செய்தியாளர் கூட்டமும் அடங்கும்.