கோலாலம்பூர் போலீஸ்: சரியாக 12 மணிக்கு கலைந்து செல்ல வேண்டும், இல்லையேல் நடவடிக்கை

 

bersih4-21இரவு மணி 11.20: பெர்சே 4 அளித்திருந்த வாக்குறுதிப்படி பேரணியில் கலந்து கொண்டுள்ளவர்கள் நள்ளிரவில் கலைந்து செல்வதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் தஜுடின் முகமட் இசா பெர்சே 4 ஏற்பாட்டார்களை நினைவுறுத்தினார்.

அவ்வாறு செய்யாவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மெர்டேக்கா கொண்டாட்டம் டாத்தாரான் மெர்டேக்காவிலிருந்து புக்கிட் ஜாலிலுக்கு மாற்றப்படும் என்பதை தஜுடின் மறுத்தார்.