பெர்சே பேரணிக்கு எதிர்ப்பாக செப்டம்பர் 16-இல் நடைபெறும் பேரணியின்போது முஸ்லிம்- அல்லாதார் கோலாலும்பூரில் இல்லாமலிருப்பது நல்லது என மலாய் என்ஜி-கள் கூட்டமைப்பின் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் கூறினார்.
குறிப்பிட்ட தேதியில் முஸ்லிம்- அல்லாதார் மாநகர் மையப் பகுதியைவிட்டு விலகி இருக்க வேண்டும் என்று கூறும் செய்திகள் வலம் வந்து கொண்டிருப்பது பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு ஜமால் இவ்வாறு சொன்னார்.
“அதுதான் மிகவும் நல்லது”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
பெர்சே பேரணியின்போது தாங்கள் ஒதுங்கி இருந்ததற்கான காரணத்தையும் அவர் விளக்கினார்.
“பேரணிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும். அதில் கலந்துகொள்பவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு விடுவார்கள்.
“பகை அணி ஒன்றைக் கண்டுவிட்டால் சினமுண்டாகும்.
“சினம் கொளும்படியான தூண்டுதல்கள் இருக்குமானால் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழலாம்”, என்றாரவர்.
பேரணி அமைதியானதுதான் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
“ஆயுதங்கள், வெட்டுக் கத்திகள் கொண்டுவருவதை நாங்கள் ஊக்குவிக்கவில்லை.
“சீனர்களின் இரத்தம் பெருக்கெடுத்தோடும் என்று கூறும் சுவரொட்டிகள் எங்களுடையவை அல்ல. தீய நோக்கம் கொண்டவர்கள் சீண்டிவிடும் நோக்கில் அப்படிச் செய்திருக்கலாம்:”, என ஜமால் கூறினார்.
நல்லதே! ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அவர்கள் தண்டனைக் கொடுப்பவர்களுக்கு சிவப்புச் சட்டைகளைத் தான் அணிய வைக்கின்றனர். இவர்களுக்கும் இது தண்டனை தான்!
பெர்சே பேரணியில் எல்லா இனங்களும் கலந்திருந்தன. ஆனால் இந்த சிவப்பு சட்டை பேரணியில் மலாய்க்காரர் அல்லாதவர் கலக்க கூடாது எனக் கூறுவது, மலாய்க்காரர்களை கேவலப்படுத்துவதற்கு ஒப்பாகும். செல்லத்தான் போகிறேன். என்னதான் செய்கிறார்கள் என பார்த்துவிடுவோமே.
ம.இ. கா. , ஐ.பி.எப். காரன்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்…?
சீனர்களுக்கும் (மஞ்சள் சட்டை)….வளயாங்கட்டிகளுக்கும் (சிவப்புச் சட்டை) இடையில் நடக்கும் இந்த இன வெறியாட்டத்தை நாம் இந்தியர்கள் தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது மிகவும் பாதுகாப்பானது…..
பாரிசன் பன்னாடை கட்சிகள் கலந்துகொள்ள வில்லையோ? எங்கே போனது ம இ கா மற்றும் எலும்பு துண்டு பன்னாடை கட்சிகள்? உங்கள் பங்காளி அம்னோ செய்யும் இந்த ஆர்பாட்டத்திற்கு உங்கள் பங்களிப்பு இல்லயோ. இதே எதிர்கட்சிகள் அல்லது அரசு சார்பற்ற இயக்கங்கள் செய்தால் துள்ளி குதிப்பிரே. இப்பொழுது எங்கே போனது உங்கள் வீரம்?
ஆஆ ம இ க !!!! அப்படின.?
ஐ பி அப் காரனுக்கு பிரச்னை இல்லை காரணம் அவனோட கட்சின் சட்டையே சிவப்புதான்
மா இ கா, ஐ பி எப்,,காரன்கள் சிகப்பு கோவணம் அணிந்து இந்த பேரணியில் கலந்து கொண்டால் பார்க்க கண்க்கொல்லா காட்சியாக இருக்கும் சரிதரத்தில் இடம்பெறும் .
ஒரு பேரணி நடக்கும்போது மற்ற இனத்தவர் அந்த ஊரை விட்டு போவது நல்லது என்று சொல்லும் இப்படிப்பட்ட அறிவுஜீவிகள் இருக்கும் வரை நாடு உருப்பட்ட மாதிரித்தான் .
பழனிவேலு, சுப்பிரமணியம், சரவணன், கமலநாதன் IPF சட்டையில் இறங்கினால் MGR சாட்டையுடன் வந்து ‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்’ என்ற எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் வந்த மாதிரி கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
இந் நாட்டின் வரலாறு எப்படி எல்லாம் திருத்தி பொய்யர்களின் பொய்யா மொழியாக வளர்ச்சி அடைந்து இருக்கின்றது? உண்மை எங்கோ ஒளிந்து கொண்டு -இல்லை ஒளித்து வைத்து அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றது.பெரும்பாலான மலாயக்காரன்களுக்கு உண்மையை பற்றி அக்கறை இல்லை–ஏனெனில் 1969 தற்கு பிறகு எல்லாமே தலை கீழ் மாறி நம்மை இந்நாட்டவர்கள் என்றே இல்லாமல் ஆக்கி விட்டனர். ஒரு காலத்தில் இந்தியர்களும் சீனர்களும் அதிகமாக இருந்த நாட்டில் இன்றைய நிலை என்ன?