‘தெரு ஆர்ப்பாட்டம் என்று மிரட்டுவதை நிறுத்துவீர்’

nurசிகப்புச்  சட்டை  ஆர்ப்பாட்டக்காரர்கள், நாளை பெட்டாலிங்  ஸ்திரிட்டில்  மற்றொரு   பேரணி நடத்தப்போவதாக மிரட்டுவதை நிறுத்திக்  கொள்ள வேண்டும் என  உள்துறை  துணை அமைச்சர்  நூர்  ஜஸ்லான்  முகம்மட் கூறியுள்ளார். .

சிகப்புச்  சட்டையினர்  என்ன  சொல்ல  நினைத்தார்களோ  அதைக்  கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி பேரணியிலேயே  சொல்லி விட்டனர்  என நூர் ஜஸ்லான்  தெரிவித்தார்.

“சுங்கை  புசார்  அம்னோ தொகுதி தலைவர் ஜமால்  முகம்மட் யூனோஸ்   பேரணியை நடத்தக்கூடாது. மீண்டும் பேரணி நடத்தினால்  அவரின்  முந்திய  முயற்சிகள் எல்லாம் வீணாகிவிடும்.

“அவருக்கும்  அவரின்  ஆதரவலர்களுக்கும்  அவர்களின்  கோரிக்கைகளை எடுத்துரைக்க  ஏற்கனவே  ஒரு  வாய்ப்பு  கொடுத்தாயிற்று. இனி  வேண்டாம்”, என்று  நூர்  ஜஸ்லான்  த  ஸ்டாரிடம்  கூறினார்.