சீனாவின் தூதர் புத்ரா ஜெயாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

 

Envoysummoned1கோலாலம்பூரின் பிரபல்யமான சைனாடவுன் என்றழைக்கப்படும் பெட்டாலிங் ஸ்டிரீட்டிற்கு நேற்று வருகையளித்த சீனாவின் தூதர் ஹுவாங் ஹுய் காங் புத்ரா ஜெயாவுக்கு வருமாறு அழைக்கப்பட்டிருக்கிறார்.

பெட்டாலிங் ஸ்டிரீட் வருகையின் போது ஹுவாங் வெளியிட்ட கடும் வாசங்களைக் கொண்ட அறிக்கை மலேசிய உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகும் என்று கருதப்படுவதால் அதற்கு விளக்கம் அளிக்க அவர் அழைக்கப்பட்டிருக்கிறார்.

எதிர்வரும் திங்கள்கிழமை ஹுவாங் அவருடை அறிக்கைக்கு விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று புத்ரா ஜெயா வட்டாரம் த ஸ்டாரிடம் கூறிற்று.

ஹுவாங் வெளியிட்ட கருத்தை மலேசியா கடுமையாகக் கருதுகிறது. அது மலேசியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதற்கு சமமாகும் என்று பெயர் கூறப்படாத ஓர் அதிகாரி கூறினார்.