படையினரை போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்த இடமளிக்கப்படாது!– அருந்திக்க பெர்னாண்டோ

channel-4படையினரை போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்த இடமளிக்கப்பட மாட்டாது என பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாம் உலகின் முதனிலை பயங்கரவாத அமைப்பு ஒன்றுடன் கொடுக்கல் வாங்கல் செய்துள்ளோம்.

இவ்வாறான பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக செயற்படும் போது பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.

ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு நாட்டுக்குள் தீர்வு காணும் நோக்கில் நாம் ஆளும் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளோம்.

அப்பாவி படைவீரர்கள் போர்க்குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த இடமளிக்கப்பட முடியாது.

போர் இடம்பெற்ற காலத்தில் அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அதற்கு நியாயம் வழங்கப்பட வேண்டும்.

எனினும் அது பழைய காயங்களை மீளவும் கொதிக்கச் செய்யும் முயற்சிகளை நாம் எதிர்க்கின்றோம் என சிங்களப் பத்திரிகையொன்றுக்கு பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: