1எம்டிபி வெளிநாட்டு நிறுவனத்துடன் சேர்ந்து கெடாவில் சூரிய சக்தி திட்டத்தில் ஈடுபடவில்லை

solarபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  1எம்டிபி  வெளிநாட்டு  நிறுவனம்  ஒன்றுடன்  சேர்ந்து  கெடாவில்  நாட்டின்  மிகப்  பெரிய  சூரிய  மின்னாற்றல்  திட்டத்தை  உருவாக்குவதில்  ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுவதை  மறுத்தார்.

“1எம்டிபி  DeSable Capital Management LLC  நிறுவனத்துடன்  கூட்டு  ஒப்பந்தம்  எதையும்  செய்துகொள்ளவில்லை”, என  நேற்று  நாடாளுமன்றத்தில்  எழுத்துப்பூர்வமான   பதில்  ஒன்றில்  கூறினார்.