ரிம2.6 பில்லியனிலிருந்து மசீசவுக்கு எவ்வளவு கிடைத்தது?

 

 பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்ட ரிம2.6 பில்லியனிலிருந்து மசீசவுக்கு எவ்வளவு கிடைத்தது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார் டிஎபி சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங்.

அந்தத் தொகையும் மசீச தலைவர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதா அல்லது மசீசவின் அதிகாரப்பூர்வமான வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதா என்று லிம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் வினவியுள்ளார்.

தனிப்பட்டவர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டிருந்தால், அப்பணத்தைப் பெற்றவர்கள் யார் என்று அவர் கேட்டுள்ளார்.

இதற்கான பதிலை அளிப்பதற்கு மசீச தலைவர்களுக்கு லிம் 24 மணி நேரம் வழங்கியுள்ளார்.

பதில் கிடைக்கவில்லை என்றால், கட்சியின் வங்கிக் கணக்கு அல்லது தலைவர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகள் குறித்து விசாரணை நடத்துமாறு தாம் மலேசியன் ஊழல் எதிர்ப்பு ஆணையத்திடம் புகார் செய்யப் போவதாக லிம் தெரிவித்தார்.