பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்ட ரிம2.6 பில்லியனிலிருந்து மசீசவுக்கு எவ்வளவு கிடைத்தது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார் டிஎபி சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங்.
அந்தத் தொகையும் மசீச தலைவர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதா அல்லது மசீசவின் அதிகாரப்பூர்வமான வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதா என்று லிம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் வினவியுள்ளார்.
தனிப்பட்டவர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டிருந்தால், அப்பணத்தைப் பெற்றவர்கள் யார் என்று அவர் கேட்டுள்ளார்.
இதற்கான பதிலை அளிப்பதற்கு மசீச தலைவர்களுக்கு லிம் 24 மணி நேரம் வழங்கியுள்ளார்.
பதில் கிடைக்கவில்லை என்றால், கட்சியின் வங்கிக் கணக்கு அல்லது தலைவர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகள் குறித்து விசாரணை நடத்துமாறு தாம் மலேசியன் ஊழல் எதிர்ப்பு ஆணையத்திடம் புகார் செய்யப் போவதாக லிம் தெரிவித்தார்.
ரிம2.6 பில்லியனிலிருந்து மசீசவுக்கு எவ்வளவு கிடைத்தது?!!!!!!!!!!!!!
செம்பருத்திக்கு ஒரு வேண்டுகோள் ,இந்த செய்தி முற்றிலும் பொய்யான சித்தி ,பொய்யான செதிககளை தமிழ் எழுத்துக்களை கொண்டு பிரசுரிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ,தமிழ் மொழியை மதிக்க தெரிந்து கொள்ளுங்கள் ,,நன்றி
2.6 பில்லியன் நஜிப்பின் நன்கொடை பணத்திலிருந்து மசீசவுக்கு கிடைத்த நன்கொடை எவ்வளவு ? என்றல்லவா தலைப்பு இருந்திருக்க வேண்டும்.
அதை விட்டுட்டு என்னமோ 2.6 பில்லியன் நஜிப்புடைய ஊழல் பணம் மாதிரி எழுதுகிறீர்கள்.
2.6 பில்லியன் நஜிப்பின் நன்கொடை பணத்திலிருந்து மஇகா-வின் “பழைய” தலைமைத்துவத்துக்கு கிடைத்த நன்கொடை எவ்வளவு ? என்று மஇகா-வின் “புதிய” தலைமைத்துவம் கேள்வி எழுப்புமா ?
பொறுத்திருந்து பார்ப்போம்,நாம் வீட்டுக்கு வேண்டியதை முடித்து,சமுதாயத்துக்கு வோதுக்கிய நேரத்தில் கணினி முன் அமர்ந்து யோசிக்கிறோம் எழுதுகிறோம்,ஆனால் அரசு பலரை சிந்திப்பதற்கே கூலி கொடுத்து வளர்த்து வருகிறது.அரசியலில் யாரும் பகைவரோ,நண்பரோ கிடையாது.நேற்றுவரை மகாதிர் எதிரி இன்று நண்பர் நாளை?,
இந்த வேளையிலே அணைத்து ஹிந்துக்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்,வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்வோம் பிரார்த்திப்போம் அவர்களுக்காக,
வாழ்க ஹிந்துக்கள்,
வாழ்க நாராயண நாமம்.