சிங்கங்கள் விழித்துவிட்டன…விரைவில் இரத்த கடல் ஓடும்: ரஷ்யாவுக்கு மிரட்டல் விடுத்த ஐ.எஸ் தீவிரவாதிகள்

isisattack_russia_001ரஷ்யாவை மிக விரைவில் தாக்குவோம் என்று ஐ.எஸ் தீவிரவாதிகள் நடுங்கவைக்கும் மிரட்டலை விடுத்துள்ளனர்.

ஐ,எஸ் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக ரஷ்யாவும் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது வான்வெளி தாக்குதடல் நடத்தி அவர்களின் முக்கிய தளங்களை அழித்துவந்தனர்.

இந்நிலையில், ரஷ்ய பயணிகள் விமானமான Metrojet Airbus A321,  எகிப்தின் சினாய்  தீபகற்பத்தில்  கடந்த 31 ஆம் திகதி வெடித்துசிதறியதில் அதில் பயணம் செய்த 224 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு நாங்கள் தான் காரணம் என ஐ,ஸ் தீவிரவாதிகள் மார்புதட்டிவந்த நிலையில், இதற்கு ரஷ்யா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஐ.எஸ் ரஷ்யாவுக்கு மிரட்டல் விடுத்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

அதில், சிங்கக்கூட்டமாகி நாங்கள் விழித்துவிட்டோம், அதனால் தற்போது உங்கள் குரல்கள் அடங்கி அமைதியாகிவிட்டது, உங்கள் மீது தாக்குதல் நடத்தி உங்கள் இடங்களை கைப்பற்றுவோம்.

மிக மிக விரைவில் இந்த தாக்குதல் தொடங்கப்பட்டு, இரத்த கடல் ஓடும் மேலும் உங்களுடைய குழந்தைகளை எங்களுக்கு அடிமைகளாகக்குவோம் என்று கூறியுள்ளனர்.

-http://world.lankasri.com