விஸ்மா புத்ரா: பாரிஸ் தாக்குதலில் மலேசியர் எவரும் காயமடையவில்லை

wismaபாரிசில்  துப்பாக்கிக்காரர்களும்  தற்கொலை  வெடிகுண்டு  வெடிப்பாளர்களும்  நடத்திய  பயங்கரவாதத்  தாக்குதலில் பலியானவர்களில்  மலேசியர்  எவரும்  இருப்பதாக தலவல்  இல்லை  என வெளியுறவு  அமைச்சு  அறிவித்துள்ளது.

பாரிஸ்  நகரில் இசை  அரங்கு,  விளையாட்டரங்கு  எனப்  பல  இடங்களில்  நிகழ்ந்த  தாக்குதல்களில்  150 பேருக்குமேல்  கொல்லப்பட்டிருப்பது  தெரிய  வந்துள்ளது.

“இத்தாக்குதல்களை  மலேசிய  அரசாங்கம்  வன்மையாகக்  கண்டிக்கிறது.

“இக்கொடிய  தாக்குதல்கள்  நாம்  அனைவரும்  பயங்கரவாதத்தை  உறுதியுடன்  எதிர்த்து  நிற்க  வேண்டும்  என்பதை  மறு உறுதிப்படுத்துகிறது.”, என  அமைச்சு  விடுத்த  அறிக்கை கூறியது.