காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு இன்றும் அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டு குழுவினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
தமது விஜயத்தின் போது சந்தித்த காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இராணுவத்தினரால் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தம்மிடம் சாட்சியளித்தவர்கள் குறிப்பிட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இலங்கைக்கு 10 நாட்கள் விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல் போனோர் தொடர்பான செயற்பாட்டு குழுவினர், நேற்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இதனைக் குறிப்பிட்டனர்.
ஜனநாயக சமூகத்திற்கு இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
-http://www.tamilwin.com