பெண் ஒருவர் தவறு செய்தால் மரண தண்டனை, ஆனால் ஆண் தவறு செய்தால் கசை அடி!

இலங்கைப் பெண் ஒருவரை கல்லால் அடித்துக் கொலை செய்யவேண்டும் என்று சவுதி அரேபிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சவுதியில் பணி புரிந்த இலங்கைப் பெண் ஒருவர் வேறு ஆண் ஒருவரோடு தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவருக்கு மரண தண்டனையும்,. தொடர்பு வைத்த ஆணுக்கு 100 சவுக்கடியும் தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இலங்கைப் பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை தளர்த்துமாறு கூறி , இலங்கை வேலைவாய்ப்பு அமைச்சரவை மையம் மேன் முறையீட்டு ஒன்றை கோரி வழக்கு தொடர்ந்துள்ளது.

அதாவது பெண் ஒருவர் தவறு செய்தால் மரண தண்டனை. ஆனால் ஆண் தவறு செய்தால் கசை அடி. இவ்வாறு ஏன் பாகு பாடு காட்டவேண்டும் என்பது பலரது கேள்வியாக உள்ளது. ரியாத்தில் உள்ள இலங்கை தூரகம் , இது தொடர்பாக பல நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

– athirvu.com

TAGS: