ஐந்து மாநிலங்களின் அம்னோ கிளைகள் நஜிப் பதவி விலக வேண்டும் எனக் கோருகின்றன

answerஅம்னோ தலைவர் நஜிப் ரசாக் பதவி விலக வேண்டும் என்று ஐந்து மாநிலங்களிலிருந்து இன்னும் 34 அம்னோ கிளைகள் கோரிக்கைகள் விடுத்துள்ளன. நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நெகிரி செம்பிலான், சிலாங்கூர், ஜொகூர், பேராக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அம்னோ கிளைகள் இதனை அறிவித்ததாக சினார் ஹரியான் செய்தி கூறுகிறது. பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்தில் நம்பிக்கை இழந்து விட்டதால் அவர் பதவி விலக வேண்டும் என்று இக்கிளைகள் ஏகமனதாக கோரிக்கை விடுத்துள்ளன.