அம்னோ உறுப்பினர்கள் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறும் எல்லாக் கருத்துகளையும் ஏற்றுக்கொள்வதில்லை ஆனாலும் அவரை மதிக்கிறார்கள். த ஸ்டாருக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அம்னோ உதவித் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிட் இவ்வாறு கூறினார்.
“அம்னோவில் பெரும்பாலோர் இன்னும் அவரை மதிக்கிறார்கள். ஆனால், அவரை மதிப்பது வேறு, அவரின் கருத்துகளை ஏற்றுக்கொள்வது வேறு”, என்றாரவர்.
அம்னோவையும் அதன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கையும் மகாதிர் தொடர்ந்து குறைகூறி வந்தாலும் கட்சியில் பலர் அவரை மதிக்கிறார்கள் என்று கூறிய ஜாஹிட் டிசம்பர் 10 அம்னோ பேரவைக் கூட்டத்தில் கலந்து அவரும் அழைக்கப்பட்டிருக்கிறார் என்றார்.
“விரைவில் அவருக்கு அழைப்பு அனுப்பப்படும் என்று நம்புகிறேன். அதை ஏற்பதும் மறுப்பதும் அவரைப் பொறுத்தது”, என்றவர் சொன்னார்.
துணைப் பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், மகாதிரைச் சென்று கண்டதாகவும் ஜாஹிட் தெரிவித்தார்.
“டாக்டர் மகாதிரை அவரது இல்லத்திலேயே சென்று கண்டேன். அதற்குமுன்பு வேறு விவகாரங்களுக்காக அவரைச் சென்று பார்த்திருக்கிறேன். ஆனால், இம்முறை மரியாதைக்காக அவரைச் சென்று கண்டு அவரது வழிகாட்டுதலையும் அறிவுரையையும் நாடினேன்.
“அவர் வெளிப்படையாக பேசினார். அவரது கருத்துவேறுபாடுகளை மதிக்கிறேன்”, என்றாரவர்.
மதியாதார் வீட்டு வாசலை மிதிக்காதே என்று உங்களுக்கும் தெரியவில்லை. அக்கூட்டத்திர்க்கு வந்தால் அவருக்கும் மதிப்பில்லை என்று அவருக்குப் புரிகின்றதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
“அழைக்கப்படுவது உறுதி”. அவருடன் எத்தனை பேர் கைகுலுக்கி குசலம் பேசுகிறார்கள் என்று படம் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். அவர்களைக் கட்சியை விட்டு நீக்குவதற்கு உதவியாக இருக்கும்! எல்லாம் நரித் தந்திரம்!
மகாதீர் மானமுள்ள ஒரு தலைவர் உன்னை உன் ஜாவாக்காரன் கூட மதிப்பதில்லை அதுவும் அண்மையில் உன் படத்தை ஜாவாக்கரணுங்க பார்த்து துப்பு டுப்புன்னு துப்பினாணுங்க மற்ற இனத்தவரோ உன்னை பொதுவிலே காரி உமிழ்கின்றனர் கெட்டவனுக்கு துணை போகும் உன் அழைப்பை சொறி பிடித்த MIC நாதேரிகள் தவிர வேறு எவனும் ஏற்கமாட்டான் pooi