சரவாக் தேர்தலில் போட்டியிடும் 15 வேட்பாளர்களை பிகேஆர் அறிவித்தது

sarபிகேஆர்,  எதிர்வரும் சரவாக்  சட்டமன்றத்  தேர்தலில்  போட்டியிடும்  வேட்பாளர்  பட்டியலின்  முதல்  தொகுதியை  இன்று  அறிவித்தது.

அதில் 15பேர்  இடம்பெற்றிருக்கிறார்கள்.  போட்டியிடும்   ஆற்றல்கொண்ட  45  பேரிலிருந்து  இந்த  15  வேட்பாளர்களும்  தேர்ந்தெடுக்கப்பட்டதாக  பிகேஆர்  உதவித்  தலைவர்  டாக்டர்  ஏ.சேவியர்  ஜெயகுமார்  கூறினார்.

எல்லாருமே  நிபுணத்துவம் வாய்ந்தவர்கள்.  திறமையானவர்கள்.  களத்தில்  இறங்கி  வேலை  செய்து  அவர்களின்  ஆற்றலை நிரூபித்திருப்பவர்கள்  என்றாரவர்.

“அடுத்த  தொகுதியை  உரிய  நேரத்தில்  அறிவிப்போம்”, என்று  கூச்சிங்கில்  சேவியர்  தெரிவித்தார்.