மரியாவுக்கும் அம்பிகாவுக்கும் இரவுநேர ஆபாச தொலைபேசி அழைப்புகள்

maria berகடந்த  மூன்று  மாதங்களாக  அறிமுகமற்ற  பேர்வழிகள்  இரவு  நேரங்களில்  தொலைபேசிகளில்  அழைத்து  ஆபாசப்  பேச்சுப்  பேசி பெர்சே  தலைவர்  மரியா  சின்  அப்துல்லாவுக்கும்  அவருக்குமுன்  அப்பதவில்  இருந்த  அம்பிகா  ஸ்ரீநிவாசனுக்கும்   தொல்லை  தருகிறார்களாம்.

இப்படிப்பட்ட  ஆபாச  தொலைபேசி  அழைப்புகள்  முதன்முதலாக  செப்டம்பர்  மாதத்தில்  பின்னிரவு  மணி  2-க்கும்  4-க்குமிடையில்  வந்ததாக  மரியா  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

ஏதோ  ஆபத்து  அவசரம்  என்று  மரியா  தொலைபேசியை  எடுத்துப்  பேசியதும்  அந்தப்  பக்கத்தில்  பேசியவர்  பாலியல் சேவைக்கு விலை  பேசியிருக்கிறார்.

“எவ்வளவு,  எப்போது கிடைக்கும்  என்றெல்லாம் விசாரிக்கிறார்கள்”. பெர்சே 4 பேரணி  நடக்கும்வரை  இந்த  அழைப்புகள்  ஓயவில்லை  என்றாரவர்.

வாட்ஸ் எப்  அமைப்பிலும்  ஆபாச  செய்திகள்  வருவதாக  அவர்  தெரிவித்தார்.

அம்பிகாவுக்கும்  இதே  அனுபவம்  ஏற்பட்டிருக்கிறது.