ஒழுங்கு நடவடிக்கைக்கு அஞ்சாத முகைதின்

 

 பிரதமர் நஜிப்பை பற்றி முகைதின் யாசின் கூறியிருந்த கருத்துகளுக்கு எதிராக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளைத் தொடர்ந்து அம்னோ உச்சமன்றம் இன்றிரவு ஒரு முடிவு எடுக்கும்.

ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்வது பற்றி பயப்படுகிறீர்களா என்று கேட்டதற்கு, இல்லை என்று கையை அசைத்து சைகை காட்டினார்.

தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருப்பீர்களா என்று வினவப்பட்ட போது ஆம் என்று தெரிவிக்கும் வகையில் தலையை அசைத்தார்.

இதற்குமேல் முகைதின் யாசின் எதுவும் கூறவில்லை. பின்னர் நடைபெறவிருக்கும் அம்னோ உச்சமன்ற கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் அம்னோ தலைமையகத்திற்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.