ஷாரிஸாட்: திரும்பி வாருங்கள் மகாதிர், இல்லையேல் டிஎபி மலாய்க்காரர்களை விழுங்கி விடும்

 

 முன்னாள் பிரதமர் மகாதிர், முகைதின் யாசின் மற்றும் முகமட் ஷாபி அப்டால் ஆகியோர் அம்னோபட்டிக்கே திரும்பி வர வேண்டும் என்று அம்னோ மகளிர் பிரிவு இன்று வலியுறுத்தியது.

இவ்வேண்டுகோளை விடுத்த அப்பிரிவின் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜாலில், மலாய்க்காரர்களை டிஎபி கட்டுப்படுத்துவதை தாம் விரும்பவில்லை என்றார்.

சரியோ பிழையோ முகைதின் யாசின், ஷாபி மற்றும் நமது தந்தை மகாதிர் ஆகியோர் அம்னோவுடன் இருக்க வேண்டும் என்றாரவர்.

வேறு கட்சி இல்லை. மலாய்க்காரர்களும் பூமிபுத்ராக்களும் டிஎபியிடம் சரணடைவதை நீங்கள் விரும்புகிறீர்களா என்று ஷாரிஸாட் கேட்டார். அதற்கு தாம் தயாராக இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

வன்செயலுக்கு தூபமிட்ட அவர், “டிஎபி எடுத்துக்கொள்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அம்னோ பலவீனமாக இருக்கிறது. நமது நாட்டை டிஎபி கைப்பற்றுவது தடுக்கப்பட வேண்டும்”, என்று வனிதா அம்னோவின் கூட்டத்தில் முடிவுரையாற்றிய போது கூறினார்.