கந்தகார் விமான நிலைய தாக்குதலில் பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு.

Katar.gifஆப்கானிஸ்தானின் கந்தகார் விமான நிலையத்தில் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் கந்தகார் விமான நிலையத்தில் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

இது பற்றி ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், கந்தகார் விமான நிலையத்தை 27 மணிநேரம் முற்றுகையிட்டு தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எங்களது நாட்டை சேர்ந்த ஒன்றுமறியாத மக்களில் 10 ராணுவ வீரர்கள், 2 போலீசார் மற்றும் 38 பொது மக்கள் என 50 பேர் பலியாகி உள்ளனர்.  அதனுடன் 37 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://world.lankasri.com