இலங்கையில் நல்லிணக்கத்திலும் மீள்கட்டுமானத்திலும் ஏற்படும் வெற்றி உலகத்துக்கு உதாரணமாக இருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது
இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்காவின் அரசியல்துறை உதவிசெயலாளர் தோமஸ் செனொன் திருகோணமலையில் வைத்து இந்த கருத்தை இன்று வெளியிட்டார்.
இலங்கை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முன்னேற்றங்களை கண்டுவருகிறது.
சமூக நிறுவனங்களும் இலங்கையர்களின் வாழ்க்கை தரங்களை முன்னேற்ற முயற்சித்துவருகின்றன.
இலங்கையின் கிழக்கு பகுதிக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவிகளை வழங்கிவருகிறது. தற்போது 23 மில்லியன் டொலர்கள் வரை அமெரிக்கா உதவியாக வழங்கியுள்ளது என்றும் தோமஸ் செனொன் தெரிவித்தார்.
இந்தநிலையில் இலங்கையின் வரலாற்று ரீதியான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காக அமெரிக்கா தொடர்ந்தும் உதவும் என்றும் செனொன் குறிப்பிட்டார்.
செனொன் இந்த விஜயத்தின்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆர் சம்பந்தன் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
-http://www.tamilwin.com


























படுகொலை செய்தவன் பாராட்டப்படுகிறான்.படுகொலை செய்த இந்தியா நிம்மதி மூச்சு விடுகிறான்.படுகொலை செய்யப்பட்டவன் கதறி அழுகிறான்.தமிழ் நாட்டில் தமிழ் வேஷம் போட்டவன் நையாண்டி சிரிப்பு செய்கிறான்.உலக தமிழன் இதென்ன நாடகம் என்று ……………..
அமெரிக்காவும் ..பிச்சைக்கார இந்தியாவும் பகல் கனவு காண்கின்றன ….சீனாவை வெளியேற்ற இவர்கள் ஆடும் நாடகம் பலிக்க போவதில்லை ..சீன இலங்கையில் மாத்திரம் அல்ல பக்கத்து மாலை தீவிலும் வேர் ஊன்றிவிடது …அசைக்க முடியாதபடி ..2009 மே வரை தூர நின்ற சீனாவை ..ராமேஸ்வரம் வரையில் கொண்டு வந்த பெருமை பிச்சைக்கார இந்தியாவின் அரசியல் வாதிகள் செய்த சாதனை ….கூடவே தமிழர்களை சீனா பக்கம் திருப்பியதட்கு நன்றிகள் .ஈழ தமிழர்களை பற்றி சீனா நன்கு அறியும் …அங்கு 7 கோடி தமிழர்கள் இல்லை ..ஆக சீனாவை ஈழ மக்கள் மன்னிப்பார்கள்
நேற்றுவர சிறிலங்காவை எதிர்த்தவர்கள்,இன்று சான்றிதல் வழங்குகின்றார்கள் என்றால் என்னமோ நடக்கிறது.