பாலியல் தொழிலுக்காக சிறுமிகளின் தலைமுடியை பிடித்து இழுத்த தீவிரவாதிகள்: வீடியோ வெளியிட்ட யாஸிதி ஆர்வலர்கள்

girl_slave_001ஐ,எஸ் தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட யாஸிதி சிறுமிகளை பாலியல் அடிமைகளாக பயன்படுத்துவதற்காக அவர்களின் குடும்பதினரிடமிருந்து வலுக்கட்டயமாக பிரிக்கும் காட்சியினை யாஸிதி ஆர்வலர்கள் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர்.

ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், ஈராக்கில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் வசமுள்ள ஒரு கட்டித்தின் கீழ் பகுதியில் யாஸிதி குடும்பத்தினர் கூட்டமாக நிற்கின்றனர்.

அவர்களில் சிறுமிகளை மட்டும் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்துவதற்காக ஐ.எஸ் தீவிரவாதிகள் தனித்தனியாக பிரித்தெடுக்கின்றனர், அதில் வரமறுக்கும் சிறுமிகளின் தலைமுடியை பிடித்து வலுக்கட்டாயமாக இழுக்கின்றனர்.

மேலும், AK-47 துப்பாக்கி முனையில் பல சிறுமிகளை ஒரு குழுவாக சேர்க்கின்றனர், அச்சிறுமிகள் கதறி அழும் காட்சிகள் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த ஆண்டு மட்டும் 5,000 ஆயிரம் யாஸிதி ஆண்கள், நுற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளை ஈராக்கின் சின்ஜார் நகருக்கு கடத்தி சென்றுள்ளனர்.

இதில், சில பெண்கள் தப்பித்திருந்தாலும் அவர்களும் கொடுமையான பாலியல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்கள், மேலும் கருத்தரித்த பெண்கள் சித்ரவதைக்கு உள்ளாகி கருக்கலைப்பு செய்யப்பட்டார்கள்.

அவ்வாறு பெண்கள் கருத்தரித்தால், அவர்களை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்த முடியாது என்ற காரணத்தால் கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

http://world.lankasri.com/view.php?23BL2cgMo42C8303lA3deOT22W03e2Ag2bJnB3

-http://world.lankasri.com